சத்துணவு மையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு

சத்துணவு மையத்தில்  எம்.எல்.ஏ ஆய்வு

ஆய்வு 

ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி அரசு மேல்நிலைபள்ளி சத்துணவு மையத்தில் எம்.எல்.ஏ கண்ணன் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் சத்துணவு மையத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கபடும் உணவின் தரத்தினையும், இருப்பில் உள்ள உணவு பொருட்களையும் ஆய்வு செய்தார். மேலும் தரமான உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் அப்பள்ளி தலைமையாசிரியர் கலியபெருமாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story