மழையால் குளம் சேதம் - எம்எல்ஏ ஆய்வு

மழையால் குளம் சேதம் - எம்எல்ஏ ஆய்வு

மழையால் சேதமடைந்த குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

மழையால் சேதமடைந்த குளங்களை எம்எல்ஏ ஆய்வு செய்து வருகிறார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆட்கொண்டாா்குளத்தில் மழையால் சேதமடைந்த குளத்தின் மடையை, சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா பாா்வையிட்டாா். அண்மையில் பெய்த மழையில் ஆட்கொண்டாா்குளம் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தின் மடையில் உடைப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் மணல் மூட்டைகளைக் கொண்டு மடையைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்றது.

இப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பாா்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியம், ஊராட்சி செயலா் உதயகுமாா், திமுக நிா்வாகிகள் பழனிச்சாமி, உதயகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Tags

Next Story