ஏலகிரி மலையில் பேருந்தில் கண்டக்டர் ஆக மாறிய எம்எல்ஏ

ஏலகிரி மலையில் பேருந்தில் கண்டக்டர் ஆக மாறிய எம்எல்ஏ

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ

ஏலகிரி மலையில் கட்டணமில்லா பேருந்துங்க இலவச டிக்கெட் வாங்கிக்கங்க என பேருந்தில் பயணம் செய்த மகளீருக்கு இலவச பேருந்து சீட்டை கொடுத்து கண்டக்டர் ஆக மாறிய எம்எல்ஏ.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 குக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமப் பகுதிகளில் இருந்து மருத்துவம், அரசு அலுவலகம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு அரசு பேருந்து வசதி இருந்தாலும் தமிழகத்தில் மற்ற நகர்ப்புற பகுதிகளில் இயக்கப்படும் மகளீர் காண இலவச பேருந்து இது நாள் வரை இயக்கப்படாமல் இருந்த நிலையில் மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஏலகிரி மலை, அத்தனாவூரில் இருந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டைக்கு மகளீர்க் காண இலவச பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி இன்று முதல் கொடியசைத்து துவக்கி வைத்து.

அப்போது அந்தப் பேருந்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கண்டக்டர் பேகை மாட்டிக்கொண்டு கட்டணமில்லா பேருந்துங்க இலவச டிக்கெட் வாங்கிக்கங்க என பேருந்தில் பயணம் செய்த மகளீருக்கு இலவச பேருந்து சீட்டை கொடுத்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story