கட்சி நிர்வாகி மறைவு - குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய வேல்முருகன்

கட்சி நிர்வாகி மறைவு - குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய வேல்முருகன்

ஆறுதல் தெரிவித்த வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த வேல்முருகன் எம்.எல்.ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி - கிழக்கு ஒன்றிய ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மரணம் அடைந்தார். இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ , அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, அவரது குடும்பத்தாருக்கு உங்களுக்கு நான் இருக்கிறேன் எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் என்று ஆறுதல் கூறி, ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியைவழங்கினார்.

Tags

Next Story