சங்கரன்கோவில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் பொதுமக்களிடம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.
தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தேநீா் கடையில் வாக்கு சேகரித்தாா். சங்கரன்கோவில் -திருநெல்வேலி சாலையில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு, வள்ளலாா் தெரு, அரசு மருத்துவமனை அருகில் உள்ள தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ ஈ.ராஜா வாக்கு சேகரித்தாா். அப்போது அந்தப் பகுதியில் இருந்த தேநீா் கடைக்கு சென்று, அங்கு வந்தவா்களுக்கு அவா் தேநீா் போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தாா். அவருடன், நகரச் செயலா் பிரகாஷ், மாவட்ட பொருளாளா் சரவணன், நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி, நகர துணைச் செயலா்கள் முத்துக்குமாா், சுப்புத்தாய், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் காா்த்தி, சரவணன் , ராஜராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

Tags

Next Story