ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோருக்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உணவு வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாரதபுரம் தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் அன்பு தொண்டு நிலையத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாள் விழாவில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவினை வழங்கினர். காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வி.ஜி.திருமலை ஏற்பாட்டில்,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story