கனிமொழி எம்பியிடம் நிவாரண பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ

கனிமொழி எம்பியிடம் நிவாரண பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ

நிவாரண பொருட்கள் வழங்கிய தமிழரசி எம்.எல்.ஏ 

முன்னாள் அமைச்சர் தமிழரசி ரூ. 7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி யிடம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியிடம் சுமார் 7 இலட்சம் மதிப்பிலான அரிசி,பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதற்கு முன்னர் முதல் கட்டமாக சுமார் 8 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பியிடம் தமிழரசி ரவிக்குமாா் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சிவகங்கை மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story