நரசிம்ம ஸ்வாமி கோவிலில் தேரோட்ட விழா கொடியை ஏற்றி வைத்த எம்எல்ஏ

அளேபுரம் பழமை வாய்ந்த நரசிம்ம சுவாமி திருக்கோவில் தேரோட்ட விழாவை பென்னாகரம் எம்எல்ஏ கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட அளேபுரத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு லட்சுமிநரசிம்ம சுவாமி திருக்கோவில், இந்து கோவில் திருத்தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு கொடியேற்று தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி கே மணி கலந்து கொண்டு திருத்தேர் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தார் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஊர் கிராம மக்கள் கோவில் விழா குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story