கொமதே நகர அலுவலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

கொமதே நகர அலுவலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

அலுவலகத்தை திறந்து வைத்த எம்எல்ஏ 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருச்செங்கோடு நகர அலுவலகத்தை எம்எல் ஏ ஈஸ்வரன்,எம்பி சின்ராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்டம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நகர அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர்.ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் திருச்சங்கோடு நகராட்சியில் 20க்கு மேற்குப் பட்ட இடங்களில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கொடிகள் ஏற்றப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்டத் தலைவர் சேன்யோ குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக பங்கு கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நகர செயலாளர் ஆஞ்சநேயா அசோக் ஏற்பாடு செய்திருந்தார்,நகர தலைவர் சரவணன் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story