பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம் எல் ஏ

பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எம் எல் ஏ பிரபாகரன் கலந்து கொண்டார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதன்படி பெரம்பலூரில் உள்ள அரசு மூத்த வழக்கறிஞர் ஜான் கென்னடி உறவினர் அம்பிகாபதி அவர்களின் புதல்வன் திருமணம் அண்மையில் நடைபெற்றது ஒட்டி, அவர்களது இல்லம் சென்று மணமக்களை வாழ்த்தினார், இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை மரியாதை நிமிர்த்தமாக நரிக்குறவர் சங்க நிர்வாகி தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்தனர், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை, பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரி சமையலர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர் இதனை தொடர்ந்து அவர்களிடம் பணி குறித்தும், தேவைகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியின் போது திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story