விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

தரகம்பட்டி அரசு மாதிரி பள்ளியில் நடந்த விழாவில் 83 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம் எல் ஏ சிவகாமசுந்தரி வழங்கினார்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட, தரகம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவள்ளி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தலைமை ஆசிரியர் தியாகராஜன், திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், முன்னாள் சேர்மன் அழகர், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மற்றும் மாணவ -மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாணவர்களிடையே உற்சாகமூட்டும் வகையில், அரசின் திட்டங்களை குறித்து விளக்கி கூறி, வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவதற்கு பயில்கின்ற வயதில் முறையாக கல்வியை பயில வேண்டும் என கூறி,இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் 37 மாணவிகள், 46 மாணவர்கள் என மொத்தம் 83 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story