பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

பாலவிடுதியில் 160 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எமல்ஏ வழங்கினார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணாபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திரு வேங்கடம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் 160 பேருக்கு, இன்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Tags

Next Story