திருப்பூரில் துப்புரவு பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ

திருப்பூரில் துப்புரவு பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ

நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ

திருப்பூரில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.

திருப்பூர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் முருகம்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ-. தலைமை தாங்கி பெண்கள் 500 பேருக்கு மற்றும் துப்புரவு பணியாளர்கள் 50 பேருக்கு புதிய ஆடைகளை வழங்கினார்.

இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் நந்தினி, மாநில பிரசார அணி செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, பகுதி செயலாளர் முருகசாமி மற்றும் மகளிர் தொண்டர் அணி துணைத்தலைவர் விஜயா, இலக்கிய அணி தெற்கு மாநகர தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story