நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த எம்எல்ஏ

கடத்தூர் ஊராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ துவங்கி வைத்தார்.
இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூபாய் 7.95.இலட்சம் மதிப்பீட்டில், கெடகார அள்ளி மற்றும் சூரன்கொட்டாய் பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பைப்லைன் அமைக்கும் பணியை, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story