மீனவ கிராமத்தில் கடல் சீற்ற பாதிப்புகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

மீனவ கிராமத்தில் கடல் சீற்ற பாதிப்புகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

மீனவ கிராமத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ

இனையம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆய்வு செய்தார்.

கிள்ளியூர் தொகு திக்கு உட்பட்ட, கடற்கரை பகுதிக ளில் நேற்று முன் தினம் முதல் கடல் சீற்றத்துடன் காணப் படுகிறது. இதனால் இரையுமன்துறை, இனையம் போன்ற கடற்கரை பகுதிகளில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக இரையுமன்துறை பகுதிகளில் வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். இனையம் சின்னத்துறை பகுதியில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கடலரிப்பு தடுப்பு பிரிவு செயற் பொறியாளரை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை உடன டியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story