சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டியை எம்,எல்,ஏ துவக்கி வைப்பு

சங்கரன்கோவிலில் கிரிக்கெட் போட்டியை எம்,எல்,ஏ துவக்கி வைப்பு

கிரிக்கெட் போட்டியை தொடக்கி வைத்த எம்எல்ஏ

கிரிக்கெட் போட்டியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக வின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் துவக்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன் உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story