மக்களோடு முதல்வர் திட்ட முகாமில் எம்எல்ஏ பங்கேற்பு

மக்களோடு முதல்வர் திட்ட முகாமில் எம்எல்ஏ பங்கேற்பு

மனுக்களை பெற்று கொண்ட எம்எல்ஏ

திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அருள்புரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்று மக்களின் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார்.

திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் கரைப்புதூர் ஊராட்சியில் 13 அரசுத் துறைகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளை மக்களிடத்திற்கே சென்று நிறைவேற்றும், மக்களுடன் முதல்வர் திட்டத்தை, திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைபெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story