மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்ததான முகாம் கண் பரிசோதனை முகாம்

மக்கள் நீதி மய்யம்  சார்பில் ரத்ததான முகாம்  கண் பரிசோதனை முகாம்
மக்கள் நீதிமய்யம்கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஏராளமானோர் பங்கேற்ப்பு
மக்கள் நீதிமய்யம்கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஏராளமானோர் பங்கேற்ப்பு

தமிழகம் முழுவதும் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு அதன் தொர்ச்சியாக இன்று விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது .

இந்த முகாமில் விருதுநரை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் அளித்தனர் . மற்றும் இலவசமாக கண் பரிசோதனையும் செய்து கொண்டனர் . கண்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடைமுறைகளும் இந்த முகாமில் செய்யப்பட்டது.

மேலும்,இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் கமல் கண்ணன், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த மருத்துவமுகாமில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story