காங்கிரஸ் வேட்பாளர் ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சியினர் பிரச்சாரம்

விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்க்கு ஆதரவாக இருசக்கர வாகன பிரச்சாரத்தில் மேற்கொண்ட மக்கள் நீதி மையம் கட்சியினர்

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்க்கு ஆதரவாக இருசக்கர வாகன பிரச்சாரத்தில் மேற்கொண்ட மக்கள் நீதி மையம் கட்சியினர் கூட்டணி கட்சியைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்ம் மாணிக்க தாகூர் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மையம் சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகர் ரயில் நிலையம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு இருசக்கர வாகனத்தில் பிரச்சாரமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பேரணிக்கு மக்களின் மையக் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார் நகர செயலாளர் கமல் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து இந்த பேரணியை நகர் மன்ற தலைவர் மாதவன் தொடங்கி வைத்தார் ரயில் நிலையம் முன்பு தொடங்கிய இந்த பிரச்சார பேரணி ரயில்வே பீட்டர் சாலை மதுரை ரோடு அல்லம்பட்டி போன்ற நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நெல் கடை மைதானத்தில் நிறைவடைந்தது.

Tags

Next Story