மகளிர் காவல் நிலையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா வசம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குமாரபாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி, கைத்தறி கூடங்கள் 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் 50க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள், 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன.இவைகளில் பாலியல் துன்புறுத்தல்கள், குடிபோதையில் கணவன் மனைவியிடம் தகராறு, நடைபயிற்சியில் சென்ற பெண்ணிடம் அத்து மீறல், பெண்ணிடம் செயின் பறிப்பு, கட்டுமான நிறுவனத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, பேருந்து நிலையத்தில் மாணவிகளை கிண்டல் செய்யும் ரவுடிகள்.மன உளைச்சலில் மாணவ மாணவிகள், இளம் பெண்கள் தற்கொலை, காவிரி ஆற்றில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் என பலதரப்பட்ட பிரச்சனைகள் குமாரபாளையம் தாலுக்காவில் நடந்து கொண்டுள்ளது.

பெண்கள் குற்ற சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையத்திற்குள் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பெண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்றால் திருச்செங்கோடு பெண்கள் காவல் நிலையத்திற்கு போகச் சொல்கிறார்கள். இதனால் கால விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது. மேலும் வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே குமாரபாளையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக தமிழக முதல்வருக்கு தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது. மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, நிர்வாகிகள் வசந்தி, பரூக், பராசக்தி, சூர்யா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story