சார்பு ஆய்வாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல் பயிற்சி

சார்பு ஆய்வாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு மாதிரி நேர்காணல் பயிற்சி
ஆட்சியர் ஜெயசீலன் 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஆக.26 ம் தேதி நடைபெற்றது. அதற்கான உடற்தகுதித் தேர்வு வரும் நவ.7 மற்றும் எட்டாம் தேதி நடைபெற்ற நிலையில் இதற்கான முடிவுகள் டிச. 7 ல் வெளியானது. டிச. 19ல் நேர்முகத் தேர்வு நடை பெற உள்ளது.இத்தேர்வில் வெற்றி பெற்றோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் நேர்காணல் குறித்த விழிப்புணர்வு, தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்த ஆலோசனைகள் துறை வல்லுனர்களை கொண்டு டிச. 14 காலை 10.30 மணிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் .இதை பயன்படுத்தி போட்டித்தேர்வு தன்னார்வலர்கள் பணிவாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்கேற்க studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது9360171161என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

Tags

Next Story