மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 மாதிரி தேர்வு 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-4 மாதிரி தேர்வு  150க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குரூப் 4 மாதிரி தேர்வு பயிற்சி 

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 க்கான மாதிரி தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட மைய நூலகத்திலும் இந்த தேர்வு எழுதும் ஆண்கள், பெண்கள் வந்து தேர்வுக்கான நூல்களை எடுத்து படித்து வருகின்றனர். இவ்வாறு வரும் ஆண்கள், பெண்களில் குரூப்-4 தேர்வு எழுதும் ஆண்கள் பெண்களுக்கு தற்போது மாதிரி தேர்வு தஞ்சை மாவட்ட மைய நூலகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வு கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. வாரத்திற்கு 2 தேர்வுகள் வீதம் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தாள் , 2 ஆவது தாள் என்ற அடிப்படையில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-4 தேர்வு எழுதுபவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வரும் நிலையில் இந்த தேர்வினை 150க்கும் மேற்பட்டவர்கள் எழுதி வருகிறார்கள். இவ்வாறு தஞ்சை மாவட்ட மைய நூலக அலுவலர் முத்து தெரிவித்தார்.

Tags

Next Story