காங்கேயத்தில் மிதமான மழை 

காங்கேயத்தில் நேற்று மிதமான மழை பெய்தநிலையில், சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது.

கோடைகாலத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம்‌ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து காங்கேயத்தில் நேற்று காலை முதல் பெரும்பாலான கிராமப்புறங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

பகலிலும் வெயிலின் தாக்கம் குறைவாகவும் காற்றில் ஈரப்பதமும் நிலவியது. மேலும் மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழத் தொடங்கியது, பார்ப்பதற்கு 6 மணியை போல் காட்சியளித்தது. மாலை 4 மணி அளவில் மிதமான மழை தூறிய நிலையில் காங்கேயத்தில் சுமார் 1 மணி நேரம் மிதமான பரவலான மழை பெய்தது. மேலும் விவசாய நிலங்கள், சாலைகள், பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றில் மழை நீர் வழிந்தோடியது.

Tags

Next Story