மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழை
மழை 
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை, மங்கைநல்லூர் , குத்தாலம் செம்பனார்கோவில்,தரங்கம்பாடி, மணல்மேடு, உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story