ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மிதமான மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், ராசிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டணம், வடுகம், புதுப்பட்டி, சிங்களாந்தபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story