நெல்லையில் மிதமான மழை; அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்

நெல்லையில் மிதமான மழை; அணைகளில் உபரிநீர்  வெளியேற்றம்

 நெல்லையில் ஆங்காங்கே மழை பெய்ததால், அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

நெல்லையில் ஆங்காங்கே மழை பெய்ததால், அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இவ்வாறு நீர் அதிகரித்துள்ளதால் பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று 06/01/24 காலை 8 மணி நிலவரப்படி 1524.34 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. மணிமுத்தாறு அணையில் 1560 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மழை பரவலாக பெய்தால் அணைகளின் நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story