மோடி அரசை ஒழிக்க வேண்டும்- தங்கம் தென்னரசு

மோடி அரசை ஒழிக்க வேண்டும்- தங்கம் தென்னரசு
 மோடி அரசை ஒழிக்க வேண்டுமென சிவகாசியில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
மோடி அரசை ஒழிக்க வேண்டுமென சிவகாசியில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

மோடி ஆட்சியை அகற்றாவிட்டால் வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும்,என சிவகாசியில் நடந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறது. மோடியின் 10 ஆண்டு கால அவல நிலையை அகற்ற, இந்தியாவை காப்பாற்ற ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்.

மோடி வீழ்த்தப்பட முடியாதவர் அல்ல, வீழ்த்தப்பட வேண்டியவர் என்பதை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலை ஒரே உத்தரவில் நசுக்கியவர் மோடி.யார் பட்டாசு தொழிலை அளித்தார்களோ அவர்கள்தான் இன்று முகமூடியுடன் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.

மோடி மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், வாக்களிக்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். மோடி ஆட்சியை அகற்றாவிட்டால் வட மாநிலங்களை ஆக்கிரமித்துள்ள பாசிச சக்தி தமிழகத்தையும் ஆக்கிரமிக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ அசோகன், மேயர் சங்கீதா, ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன்ராஜ், திமுக மாநகர செயலாளர் உதயசூரியன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தியாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story