மோடி அரசு பத்தாண்டுகள் செய்த ஒரே சாதனை விலைவாசி உயர்வு !

மோடி அரசு பத்தாண்டுகள் செய்த ஒரே சாதனை விலைவாசி உயர்வு !

மோடி அரசு பத்தாண்டுகள் செய்த ஒரே சாதனை விலைவாசி உயர்வு தான் என விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் பேசினார்.  

மோடி அரசு பத்தாண்டுகள் செய்த ஒரே சாதனை விலைவாசி உயர்வு தான் என விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் பேசினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலையங்குளம், சோளங்குரணி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர் குறிப்பிடுகையில்: மோடி அரசு 10 வருடங்களில் எல்லா விலை வாசியையும்அதிகரித்துவிட்டது, 45 ரூபாய் இருந்த டிசீல் விலை 90 ரூபாய் ஆகி விட்டது.

மோடி அரசு மட்டுமே கூட்டி வருகின்ற விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால் கை சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள். சோனியா காந்தி கொண்டு வந்த 100 நாள் திட்ட வேலையை ஒழிக்க வேண்டும் என்று மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மோடியை பிரதமரிலிருந்து இறக்கி ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். ஸ்டாலின் மாத மாதம் கையில் பணம் கொடுக்கிறார் ராகுல் காந்தி வருஷத்துக்கு ஒரு தடவை பணம் கொடுக்க உள்ளார். தாய்மார் கையில் பணம் கொடுத்தால் ஊர் நல்லா இருக்கும் ஊர் நன்றாக இருந்தால் மாவட்ட நல்லா இருக்கும் மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும் மாநிலம் நன்றாக இருந்தால் இந்தியா நன்றாக இருக்கும்.

இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் கையில் பணம் கொடுத்த ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார். நமது பெண்கள் அனைவருமே மகாலட்சுமி தான், ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க உள்ளார். ராகுல் காந்தி கையெழுத்திட்டு உத்தரவாத அட்டையை கொடுத்துள்ளார், இது ராகுல் காந்தியின் கேரண்டி கார்டு. கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் 100 நாள் சம்பளம் 400 ரூபாய், திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க உள்ளோம்.

Tags

Next Story