இந்தியா வல்லரசாக 3வது முறை மோடி பிரதமர் ஆவது உறுதி : ஜி.கே.வாசன்

இந்தியா வல்லரசாக 3வது முறை மோடி பிரதமர் ஆவது உறுதி : ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

இந்தியா வல்லரசாக 3வது முறையாக பிரதமராக மோடி வருவது உறுதி, மோடி தலைமையில் இந்தியா நல்லரசாக வல்லரசாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என நாசரேத்தில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேசினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு ஆதரவு கேட்டு நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், "இங்கு கூடியிருக்கும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், மலர்ச்சியும் அமைந்திருப்பது வெற்றிக்கு அடையாளம் என்றே கருதுகிறேன். இந்தியா பாதுகாப்பாகவும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாகவும் அமைய மோடி மூன்றாவது முறை பிரதமராக வருவது உறுதி. மோடி தலைமையில் இந்தியா நல்லரசாக வல்லரசாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.ஆளுமை மிக்கவர் மோடி தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் பற்று பாசம் கொண்டவர் பிரதமர் மோடி. திருக்குறளை உலகமெங்கும் பறைசாற்றி வருபவர். செங்கோலுக்கு உரிய மரியாதையை கொடுத்து பாராளுமன்றத்தில் நிறுவியவர் பிரதமர் மோடி. பொய் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகள் கேட்டு வரும் திமுகவிடம் ஏமாற வாக்காளர்கள் ஏமாளிகள் அல்ல.

Tags

Next Story