ராமநாதபுரம்: தேமுதிக தலைவருக்காக மோட்ச தீபம்

ராமநாதபுரம், திருவாடானை பெரிய கோவிலில் தேமுதிக தலைவர் இருப்பிற்கு தேமுதிக நிர்வாகிகள் மோட்ச தீபம் ஏற்றினர்.

ராமநாதபுரம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் புரட்சி கலைஞர், பத்ம பூஷன் கேப்டன் அவர்களின் மறைவின் 30 ஆம் நாளை முன்னிட்டு இன்று மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னாவின் அறிவுறுத்தலின் படி திருவாடானை ஆதி ரெதினேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் வி.கே.பாலு மாவட்ட தொண்டரணி இணை செயலாளர் ரமேஷ் பாபு ,ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், மற்றும் ஆண்டவூரணி செந்தில், கிளை செயலாளர் , செங்கமடை மாயாண்டி , கரையகோட்டை இளையராஜா , பண்ணவயல் ரெத்தினம் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொன்டனர்.

Tags

Next Story