வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி !

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி !

அதிமுக பிரமுகர் 

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி - அதிமுக பிரமுகர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம்‌‌, மானாமதுரை அருகே உள்ள பழைய போஸ்ட் ஆஃபீஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் துரைப்பாண்டி. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு துரைப்பாண்டியன் தனது மகளுக்கு வருவாய் துறையில் வேலை வாங்கி தருவதாக மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அதிமுக நகர் கழக செயலாளர் விஜிபோஸ், துரைப்பாண்டியிடமிருந்து 8 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அவரது மகளுக்கு வேலை வாங்கி தராமல் கடந்த 2017 ஆம் ஆண்டு 4 லட்சம் பணத்தை துரைப்பாண்டியிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுதடித்தாகவும், துரைப்பாண்டியை அவதூறாக பேசி கம்பியால் தாக்கியதாக மானாமதுரை காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story