ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
பணம் பறிமுதல் 
நவம்பட்டு சோதனை சாவடியில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 65 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த நவம்பட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரி எம்.பார்த்திபன் தலைமையில் தலைமை காவலர் சாம்பசிவம் மற்றும் போலீசார் மாலைமதி, பிரபு உள்ளிட்டோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65 ஆயிரத்தை கைப்பற்றி திருவண்ணாமலை உதவி ஆட்சியர் மந்தாகினியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Tags

Next Story