சாத்தான்குளம் அருகே உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சாத்தான்குளம் அருகே உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோப்பு படம் 

சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அடுத்துள்ள சாலை புதூரர் ஸ்ரீமாரியம்மன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளன. நேற்றுபூசாரி, பூஜைக்காக கோயிலுக்கு வந்தபோது கோயில் கதவு உடைத்தை உள்ளே சென்ற மர்ம நபர்களை அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த வின்சென்ட் சாத்தான்குளம் போலீசில் புகார் தெரிவித்தார். இதேபோல் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள மற்றொரு கோயிலில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story