கைகொடுத்த பருவமழை - கடலூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் முழு கொள்ளவு

கைகொடுத்த பருவமழை - கடலூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் முழு கொள்ளவு
 நிரம்பிய ஏரி
கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி பகுதியில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்திற்கு உள்ள 228 ஏரி மற்றும் குளங்களில் 3 ஏரிகள் இதுவரை முழுமையாக நிரம்பியுள்ளது. இதில் 9 ஏரிகள் 75 சதவீதம், 45 ஏரிகள் 51 முதல் 75 சதவீதம், 102 ஏரிகள் 25 முதல் 50 சதவீதம், 61 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும், 8 ஏரிகள் முற்றிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

Tags

Next Story