மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று, மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., சமய் சிங் மீனா தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, எஸ்.பி., சமய் சிங் மீனா அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாவட்டத்தில் கடந்த மாதத்தில் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தன், நந்தகுமார், கவிதா மற்றும் 3 காவல் உதவி ஆய்வாளர்கள், 1 சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாண்டிசெல்வம்,மணிகண்டன், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story