வருகிற 11 ந் தேதி குறைதீர்க்கும் கூட்டம்

வருகிற 11 ந் தேதி குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ம் தேதி நடக்கிறது

சேலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ம் தேதி நடக்கிறது
சேலம் தளவாய்பட்டி, ஸ்டீல் பிளாண்ட் ரோட்டில் சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கமிஷனர் சிவக்குமார் தலைமையில் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் காலை 11:30 மணி முதல் 1 மணி வரையும், தொழிலதிபர்கள் 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யூ ஏ என் மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களை வருகிற 8ம் தேதிக்குள் இந்த அலுவலகத்தின் ro.salem@epfindia.go.in மின்னஞ்சலில் தெரியப்படுத்துவும். இந்த தகவலை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story