மாதாந்திர பராமரிப்பு பணி - பழனியில் ரோப் கார் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணி - பழனியில் ரோப் கார் நிறுத்தம்

ரோப் கார் 

பழனி முருகன் கோவில் ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமிதரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை ,மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி இம்மாத மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று திங்கட்கிழமை ஒரு நாள் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story