விஷ தேனீக்கள் கொட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

விஷ தேனீக்கள் கொட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

தேன் கூடு 

கெங்கவல்லி அருகே, நடுவலூர், புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா, 22. இவர் நேற்று காலை 6:00 மணியளவில் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, வேப்பமரத்தில் இருந்த ராட்சத விஷ தேனீக்கள் பறந்து வந்து கீர்த்தனாவை சூழ்ந்து கொட்டியது. பின் அவர் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதன் பின் 8மணி அளவில் பள்ளி மாணவ மாணவிகளை தேனீக்கள் கொட்டியது.15 பேருக்கு மேற்பட்டவர்களை கொட்டியதில் காயம் அடைந்தவர்கள் அனைவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடைத்து தேனீக்கள் கூட்டை அழித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story