சித்தாமூர் அருகே மின்சாரம் தாக்கி 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

சித்தாமூர் அருகே மின்சாரம் தாக்கி 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
சித்தாமூர் அருகே மின்சாரம் தாக்கி 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
சித்தாமூர் அருகே மின்சாரம் தாக்கி 30க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது.

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகளக்காடி கிராமத்தில் ஏழுமலை செல்லம்மா தம்பதியினர் விவசாயம் செய்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டு ஆட்டு பட்டியில் சுற்றி கட்டி வைக்கப்பட்டிருக்கும் கம்பிவெளியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டு பட்டியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த நிலையில் வழக்கம்போல செல்லம்மா ஆட்டு பட்டியில் ஆடுகளை வந்து பார்க்கும் பொழுது ஆட்டு பட்டியில் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி ஏழுமலை செல்லம்மா தம்பதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story