அரூரில் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைப்பு

]தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மற்றும் இருசக்கர வாகன கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் அரூர் மேல் பாட்சா பேட்டை கீழ்பாட்சாபேட்டை அசோகா பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

அதிகாலையில் எழுந்த அந்த பகுதியை சேர்ந்த உரிமையாளர்கள் தங்களது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் இது குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் அரூர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர் மர்ம நபர்கள் கார் கண்ணாடி உடைத்ததில் அப்பகுதியில் பெறும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story