கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்க கூட்டம்

கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்க கூட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர் சங்க கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர் சங்க கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, அமைந்துள்ள சிஐடியு நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்க (DBC) கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க செயலாளர் என்.வேலுச்சாமி சங்க செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால இயக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து பேசினார் . கூட்டத்தை நிறைவு செய்து சங்க இணைச் செயலாளர் இளவேந்தன் பேசினார் .

இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்திப்பது , பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு வழங்குவது , பிரதி மாதம் ஏழாம் தேதிக்குள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் லட்சுமி, விஜயா,ஈஸ்வரமூர்த்தி ,திருநாவுக்கரசு, கோபால் ,பரிமளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக சத்யா நன்றி கூறினார்..

Tags

Next Story