டிரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு

டிரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு

கொசு மருந்து தெளிப்பு 

ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,மேயர் பிரியா ஆகியோர் திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராசன், ரமணி, மாநகர அலுவலர் ஜெகதீசன், பூச்சியியல் வல்லுநர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story