போளூரில் கொசு மருந்து அடிக்கும் பணி

போளூரில் கொசு மருந்து அடிக்கும் பணி
கொசு மருந்து அடிக்கும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டு வாரியாக தினமும் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் முஹமத் ரிஸ்வான், துப்புரவு மேற்பார்வையாளர்கள் யோகராஜ், சோமு, தலைமை எழுத்தர் மஹமத் இசாக் மற்றும் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story