திருமண வீட்டிற்கு சென்ற தாய்,மகன் மாயம்

திருமண வீட்டிற்கு சென்ற தாய்,மகன் மாயம்

மாயமான பெண்

புதுக்கடை அருகே திருமண வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற தாய்,மகன் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்,புதுக்கடை அருகே அம்சி பகுதி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் அருள் கணபதி.இவர் பெயின்ட்ராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி அமிர்த ஷீலா .இந்த தம்பதியினருக்கு அபினந்த் என்ற மகன் உள்ளார். அபினந்த் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று ஆரல்வாய்மொழி சுபாஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறி, அமிர்த ஷீலா மற்றும் மகன் அபினந்த் சென்றுள்ளனர்.

ஆனால் திருமண வீட்டிற்கு செல்லவில்லை என கூறப்டுகிறது. இதையடுத்து மனைவி மகனை அருள் கணபதி பல இடங்களில் தேடியும், அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவேமாயமான மனைவி மகனை கண்டுபிடித்து தர, போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story