பாலா பீடத்தில் அன்னை பாலா சஹஸ்ரநாம பூஜை

பாலா பீடத்தில் அன்னை பாலா சஹஸ்ரநாம பூஜை

பாலா பீடத்தில் அன்னை பாலா சஹஸ்ரநாம பூஜை

நெமிலி பாலா பீடத்தில் அன்னை பாலா சஹஸ்ரநாம பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் அன்னை பாலா சஹஸ்ரநாம பூஜை பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி மற்றும் அவரது துணைவியார் நாகலட்சுமி எழில்மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பூஜையில் கலந்துகொண்ட அன்னை பாலா ஆத்மீக குடும்பத்தாருக்கு பூஜை செய்யப்பட்ட டாலரும், குங்குமமும் அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னை பாலா தீபாராதனையை பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்தார்.

தொடர்ந்து கவிஞர் நெமிலி எழில்மணியின் மூத்த புதல்வர் குருஜி பாபாஜியின் 57-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. பின்பு அவர் எழுதிய ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டது. நிறைவாக பாலாபீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது.

Tags

Next Story