நாகர்கோவில் அருகே மகன் இறந்ததுக்கத்தில் தாய் தற்கொலை

நாகர்கோவில் அருகே மகன் இறந்ததுக்கத்தில் தாய் தற்கொலை
பைல் படம்
நாகர்கோவில் அருகே மகன் இறந்ததுக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதி சகாய நகரை சேர்ந்தவர் போவாஸ் தேவசோபனம் என்பவர் மனைவி செல்வரத்தினம் (67). இவர்களது இரண்டாவது மகன் ஆஸ்டின் போவாஸ் (40). திருமணமாகாதவர். கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி திடீர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார்.

இந்த மகன் மீது செல்வரத்தினம் மிகவும் பாசமாக இருந்தார். மகனின் இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று காலையில் மூத்த மகன் வீட்டிற்கு செல்வரத்தினத்தை தவிர கணவர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

மாலையில் மீண்டும் வீடு திரும்பிய போது, அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் செல்வரத்தினம் பிணமாக காணப்பட்டார். இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோதனையில் சாவதற்கு முன்பு செல்வரத்தினம் தனது கையில் மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்ற உருக்கமான வாசகத்தை எழுதியிருந்தார்.

இதனால் மகன் இறந்த தூக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story