மகள் இறந்த சோகத்தால் தாய் தற்கொலை

மகள் இறந்த சோகத்தால் தாய் தற்கொலை

பைல் படம்

திருப்பத்தூர் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் மகள் இறந்த சோகத்தால் தாய் விஷம் குடித்தது தற்கொலை செய்த்தால் பரபரப்பு உண்டானது.

திருப்பத்தூர் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் மகள் இறந்த சோகத்தால் தாய் விஷம் குடித்தது தற்கொலை செய்த்தால் பரபரப்பு உண்டானது.

திருப்பத்துார் அடுத்த உடையாமுத்துார் அருகே கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி உமா (40).வயது இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுடைய 17 வயது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் இதனால் விரத்தியில் இருந்த உமா, இன்று வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்துள்ளார் உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உமா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அவரது தாய் விஜயமாலா புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story