மகளை காணவில்லை தாய் புகார்

மகளை காணவில்லை தாய் புகார்

தாய் புகார் 

தொளசம்பட்டியில் திருமணமான மகளை காணவில்லை என தாய் புகார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தி ராசானூர் பகுதியை சேர்ந்த முருகன் தங்கம்மாள் தம்பதியினருடைய மகள் அக்ஷயாவை அம்மரகுந்தி ராசானூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும், அவர் கடந்த 27ஆம் தேதி இரவு 8முதல் காணவில்லை எனவும், அவரை மேச்சேரி வெள்ளார் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் கூட்டி சென்றதாகவும் தாய் கொடுத்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags

Next Story