அரியலூர்: மருமகனை வெட்டிய மாமியார்

அரியலூர்: மருமகனை வெட்டிய மாமியார்

அரிவாள் வெட்டு

மகளை கொலை செய்த மருமகனை மாமியார் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் பிரியா என்கிற பராசக்தி. இந்நிலையில் பராசக்தியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக பராசக்தியை, தமிழரசன் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் காவல்நிலையத்தில் சரோஜா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்த தமிழரசன் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சரோஜா, தமிழரசனின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தமிழரசனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க முயன்ற அவரது தாயார் விமலாவையும் வெட்டியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story