வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தாய் பலி: மகள் படுகாயம் !

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தாய் பலி: மகள் படுகாயம் !

தாய் பலி

கோவில்பட்டி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மகள் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கட்டாரங்குளம் மேல தெருவைச் சோ்ந்தவா் கு. குருவம்மாள் (50). இவா், இவரது தாய் காளியம்மாள் (80) இருவரும் குடியிருந்து வரும் வீட்டில் ஒரு பக்கம் பொதுச்சுவராகும். இந்தப் பொதுச்சுவருடன் தொடா்புடைய வீட்டில் வசிக்கும் நவநீதகிருஷ்ணன், புதிதாக தனிச் சுவருடன் வீடு கட்டும் நோக்கில் ஒன்றரை அடி இடைவெளி விட்டு வானம் தோண்டினாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுச்சுவா் திடீரென இடிந்து விழுந்ததாம். அப்போது வீட்டினுள் இருந்த குருவம்மாள், காளியம்மாள் இருவரும் இடிபாட்டில் சிக்கினா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டதில், காளியம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது. குருவம்மாள் காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story